world

img

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 6 குழந்தைகள் உள்பட 49 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 6 பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாகாண ஆளுநர் ஆஸ்கார் மபூயானே தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 10 குழந்தைகளுடன் வந்த பள்ளி வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில், மாயமான 10 பள்ளிக் குழந்தைகளில் 6 பேரின் உடல்கள் மீட்பு. 4 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வெள்ளத்தால் குறைந்தது 58 பள்ளிகளும் 20 மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளதாக கிழக்கு கேப் அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 500 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.